Montag, 30. Januar 2012

வாழ்வை மாற்றும் `நட்பு’! by vayal `ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்' - ஆங்கிலப் பழமொழி. `அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன' என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும். இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே! "பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம். `என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்' என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை. "மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்'' என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் "இடுக்கண் களைவதே நட்பு'' என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார். நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்... என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா? ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா? வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா? நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா? தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா? நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா? நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா? கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்' என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும். உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள். ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்' அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது... "தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்; எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்; அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்; உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்; நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை'' நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்! *** vayal | ஜனவரி 30, 2012 at 5:55 பிற்பகல் | Categories: சிந்தனைகள் | URL: http://wp.me/p

Freitag, 27. Januar 2012

திருமணத்தடை நீக்கும் கல்யாண சுந்தரேசுவரர் by vayal தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார். ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்' என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்' எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்' என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்', `சவுந்தரநாயகர்' என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள் இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது. திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.

Mittwoch, 25. Januar 2012

First obey; then command. Obey your own self.

Anybody or anything must not bind you. You must be free.

Give to others-without attachment. Help others, but without attachment.

You don't want (i.e. need) to speak. Be mounam. You don't want (i.e. need) to do anything. Simply be! Be It!.

The mind must be absolutely still, like a lake with no ripples.

  New-age Daughter in law
             
Some daughters-in-law are well trained and well mannered....

They don't come to change the family, they are here to ... ( READ ON !)

The new wife was being welcomed at the husband's home in a traditional
manner. As expected she gave a speech;
'My dear family members, I thank you for welcoming me in my new home
and family. Firstly, my being here does not mean that I want to change
your way of life, your routine ..'No, I will never do that, never in a
million years.'

'What do you mean my child?' asked the father-in-law.
'What I mean dad is (looking at her in-laws);

Those who used to wash the dishes must carry on washing them.
Those who used to do the laundry must carry on doing it.
Those who cooked should not stop at my account, AND
Those who used to clean should continue cleaning!!!

'And what are you here for?' inquired the mother-in-law.

Dienstag, 24. Januar 2012

குடும்பம் என்பது ஆலமரம் போன்றது மரம் வளர்ந்த பிறகு தூண்கள்போல் விழுதுகள் தாங்குகின்றன.அது போல் குடும்பம் என்ற மரம் தழைக்க கணவன் மனைவி பிள்ளைகள் அமைந்து இருக்க வேண்டும் .

Montag, 23. Januar 2012

ஒரு இனம் வாழ ஒரு தாயகம் வேண்டும் ,அவ்இனத்தின் சொந்த நிலம் பாதுகாக்கப்படவேண்டும் .

Sonntag, 22. Januar 2012

skip to main | skip to sidebar
Temple of Consciousness, Mediation Centre - Kumbakonam.
வாழ்க வையகம் - Noor Nagar (Opp. Raman & Raman HeroHonda ShowRoom) Ph. 0435-2430601, 9443094200 - வாழ்க வளமுடன்

Pages
HomeDeep Meditation - 30 & 60 MinuteVethathiri Maharishi lighting a Kuthuvilakku
Vethathiri Maharishi - Yoga - Exercises Demo by Vethathiri Maharishi

நீங்களே செய்யலாம் எளிய முறையில் யோகாசனம்?

யோகாசனம் செய்வதால் பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்


எளிய முறை உடற்பயிற்சி :    Download Link :                                     Yoga - Exercises Demo by     Vethathiri Maharishi







நாம் மகானாக முடியுமா ?

மகான் என்பதன் பொருள் என்ன ? மகா + ஆன் = மகான்.


         உயர்ந்த ஆன்மா. அறிவில் தெளிந்த ஆன்மா. அன்பும், கருணையும், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறிகளை கடைபிடிக்கும் ஆன்மா. இவ்வாறு “மகான்” என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறலாம். இப்படி வாழ்ந்தவர்கள் ஆதிகாலத்திலிருந்தே பலபேர் உள்ளனர். புத்தர், மகாத்மா காந்தி, மதர் தெரஸா போன்றோர் உயர்ந்த ஆன்மாக்கள். தன்னுடைய வாழ்க்கையையே ஒரு பாடமாக மற்றவர்கள் கடைபிடிக்கும்படி வாழ்ந்து காட்டியவர்கள். இவ்வரிசையில் மகானாக வருவபர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.


        இத்தகைய மகான்களிடம் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் பிறர் என்ன செய்தால் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ முடியும் என்று சொல்கிறார்களோ அவ்வாறே அவர்களும் வாழ்ந்து காட்டியுள்ளனர். ஆனால் நம் சமுதாயத்தில் உள்ள மக்கள் அத்தகைய மகான்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் அருமை, பெருமையை புரிந்து கொள்வதில்லை. அதோடு அவர்களை போற்றி புகழ்வதோடு நிறுத்திக் கொள்வர். அவர்கள் வாழ்வது போல் நம்மால் முடியாது. அவர்கள் தனிப்பிறவிகள், மகான்கள் என்று காரணங்களை மேற்காட்டி தன் இயலாமையை மறைத்து, அவர்கள் போல் வாழ்வதற்கு முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள், தான் சொல்வதை செய்வதால் மனிதருள் மாணிக்கமாக திகழ்கிறார்கள். அவருடைய கவியில் மனிதருள் உயர்ந்தோர் யார் என்று குறிப்பிடுகின்றார்.


”மனிதனென்ற உருவினிலே மக்களுண்டு


மனமறிந்த தேவருண்டு மதிநிலைத்த மனிதருண்டு


மனமறிந்து மனஇதமாய் மாக்களுக்கும் மக்களுக்கும்


மனமுவந்து தொண்டாற்றும் மாமுனிவர் முழுமனிதன்.”

          வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இன்புற்று வாழ, உடல் நலம், மனவளம், நட்பு நலம் காக்க பிறவியின் பயனான முழுமைப் பேறு அடைய வழிமுறைகளைக் கொடுத்துச் சென்றுள்ளார். எள்ளளவும் சந்தேகமில்லாமல் அவர் சொன்ன வழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால், குருவின் வழிகாட்டலின் மூலம், நாமும் மகானாக முடியும்.


           நமக்கு அவர்கள் அளவிற்கு மன உறுதி இல்லாததால்தான் பயிற்சி முறைகள் தேவையாக உள்ளன. பயிற்சிகள் செய்யும் போது உடனே பலனளிக்கமால் போனால் மனம் தளர்ந்து விடுகிறோம். “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழியெல்லாம் மற்றவர்களுக்கு தான் !!! நமக்கு என்று வரும்போது மாற்றம் தெரியவில்லையெனில் வேறு முறைகளை கையாள ஆரம்பிக்கிறோம். பலவிதமான சந்தேகங்கள் (சந்து + ஏகம் ) வருகின்றன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்ந்த காலத்தில், நம்மில் பலர் அவர் வாழும் விதம் கண்டிருக்கிறோம். எனவே மனம் தளராமல் பயிற்சிகளைக் கடைபிடித்து நாமும் உதாரண ஆன்மாக்களாக இருந்து அவர் வகுத்த பயிற்சி முறைக்ளை மற்றவரும் பெறுவதற்கு தொண்டு செய்வோம், வளம் பெறுவோம். வாழ்க வளமுடன்.
-மூத்த பேராசிரியை. ஜெயந்தி பாலசந்திரன்
Older Posts Home
Subscribe to: Posts (Atom) 


About Me

Temple of Consciousness, Mediation Centre - Kumbakonam.
View my complete profile 
Vethathiri Maharishi & professors - Loving Speeches Free Download
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 1
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 2
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 3
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 4
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 5
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 6
Vethathiri Maharishi & professors - Loving Speeches - 7
Vethathiri maharishi - Loving Speeches
Vethathiri Maharishi - By Dr SKM MAEILANANDHAN

Popular Posts
காய கல்ப யோகம்
Vethathiri Maharishi - Yoga - Exercises Demo by Vethathiri Maharishi
எளியமுறை குண்டலினி யோகம்
ஆறு ஆதாரங்களும், சுவாசமும்
எளிய முறை உடற்பயிற்சி
சாந்தி தவம
உயர்ந்த சிந்தனை
குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி.......
நாம் மகானாக முடியுமா ?

Swamiji's Photos


Vethathiri Maharishi Video
   
powered by 



SKY Photos


Yoga Healer Baskar
   
powered by 



WCSC Kayakalpa Yoga


Thanks for visiting my site
  Video fertig angesehen
Video fertig angesehen

Donnerstag, 12. Januar 2012


முடியும் பொழுதெல்லாம் விடியும்

Join Only-for-tamil 

வெற்றி பெற்றவனுக்கு எதுவும் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது! தோல்வியுற்றவனுக்கு எதைக் கண்டாலும் பயம் வருகிறது.

வென்றவனுக்கு மலையும் கடுகு; தோற்றவனுக்கு கடுகும் மலை.

அவன் மலையோடு  மோதிச் சாகிறான், இவன் கடுகைக் கண்டு பயந்துச் சாகிறான்.

வெற்றி மயங்க வைத்துத் தோல்வியை இழுத்து வருகிறது; தோல்வி அடக்கத்தைத் தந்து வெற்றியைக் கொண்டு வருகிறது.

இது ஒரு சகடம், ஏற்றம் இறக்கம்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ஹிட்லர் வெற்றிப் பெற்றுக் கொண்டிருத்த நேரத்தில், தோல்வியைப் பற்றி யாராவது  பேசி இருந்தால் சிரித்திருப்பான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று சொல்லி இருந்தால் பிற நாட்டுக்காரர்கள் கூட ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள். இது சாசுவதம், இது நிரந்தரம் என்ற மாயை எல்லோர் கண்ணையும் மறைக்கிறது. முதுகிலே அடி விழும்போதுதான் தனக்கு ஒரு முதுகு  இருப்பதும், அடிக்க ஒரு கம்பு இருப்பதும் புரிகிறது.

தோற்றவர்களையும் நான் மரியாதையாகத்தான் பார்ப்பேன்; காரணம் அவர்களுக்கும் ஒரு காலம் வரும். வென்றவர்களை பரிதாபமாகப் பார்ப்பேன்; ' இவர்கள் எப்போது அடிவாங்கப் போகிறார்களோ?' என்று. வெற்றி மயக்கம், தோல்வி கலக்கம் இரண்டுமற்ற நிலையினை மேற்கொண்டு விட்டவனுக்கு உணர்ச்சி ஒன்றுதான். அது சந்தோஷமும் அல்ல. துக்கமும் அல்ல. அது நிரந்தர நிலை; அதற்கு அழிவு கிடையாது. பாபுவின் தூண்டிலில் இன்று நிறைய மீன் கிடைத்தால், நாளை ராமுவின் தூண்டிலில் அதிக  மீன் கிடைக்கும்.

வருவது போவதற்காக; போவது வருவதற்காக; பிறப்பது இறப்பதற்காக; இறப்பது பிறப்பதற்காக; அழிவது மீள்வதற்காக; மீள்வது அழிவதற்காக. விதைப்பது அறுப்பதற்காக; அறுப்பது விதைப்பதற்காக.

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது! மீண்டும் மழைக் காலம் வருகிறது.

மழைக் காலம் வந்து விட்டதென்று நதி குதிக்க கூடாது, அதோ வெயில் காலம் வந்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் கொதிக்கும் போது தூக்கிப் பிடித்தக் குடையை இருட்டிவிட்ட பின்பு கூட மடக்காதவன் மடையன்.

இருட்டிய போது ஏற்றி  வைத்த விளக்கை, விடிந்து விட்ட பிறகும் அணைக்காதவன் மடையன்.

குடைராட்டினத்தில் மேலே போகும்போது பலக் காட்சிகள் தெரியும்; கீழே இறங்கும் போது சுற்றி நிற்கும் ஜனங்கள்தான் தெரிவார்கள்.

புது வெள்ளம் வரும்போது குழந்தைக்கு உற்சாகம் அதிகம்; அதிலே குளித்தால் ஜலதோஷம் பிடிக்கும்.

புது வெற்றியில் தலைக்கனம்  அதிகமாகும்; அது அதிகமானால் அடுத்தாற்ப்போல் காத்து நிற்பது அவமானம்.

தேரில் உட்கார்ந்திருப்பவன் குதிரையை மட்டும்  கவனித்தால் போதாது. பாதையையும் கவனித்தாக வேண்டும்.

என் தேர்; என் குதிரை என்று காட்டிலும் மேட்டிலும் ஓட்டினால்  கவிழ்ந்து போகும்.

'நான்' என்று நினைக்காதீர்கள்; நினைத்தால் இறைவன் 'தான்' என்பதைக் காட்டி விடுவான்.

காவிரி பூம்பட்டினத்தில் குடியேறிய போது  அது கடலில் மூழ்கும் என்று எவனுக்காவது தெரியுமா? 

தம்பதிகள் மாற்றிக் கொள்ளும் மாலையே எதிர்காலத்தில் தூக்கு கயிறாகவும் மாறலாம்.

ஆகவே எந்த துறையில் உள்ளவர்களுக்கும் சொல்லுவேன்.

தோல்வி அடைந்தவர்களை  பழி வாங்காதீர்கள். அன்போடு நடத்துங்கள்.

காலை வெயிலில் உங்கள் நிழல் முன் பக்கமாக விழுந்தால் மாலை வெயிலில் பின் பக்கமாகத்தான் விழும்.

கவியரசு கண்ணதாசன்
எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து

Montag, 9. Januar 2012

pongalo pongal

அன்பு உள்ளம் கொண்டவர்களே ,
இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராஜன்,வாணீ ,அரவிந்த் .அகிலா.

Montag, 2. Januar 2012

எதிர்காலம்

ஒவ்வொரு  நிமிடமும்  உன் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது .
Happy new Year

 May god bless you

Anpe (Love)  Sivam