Mittwoch, 29. Februar 2012

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்! by vayal உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம். சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம். அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும். வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.

Mittwoch, 22. Februar 2012

இளமையின் சுகமான சிந்தனைகள் by vayal இளம் பருவத்து இனிய நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன. கை கால்களுக்கு ஜீவனிருக்கும் காலத்தில் மரங்களின் உயரம் கூடக் குறைந்து விடு கிறது. ஏரியில் நீந்திய மீனுக்குத் தெரியும், அதைவிட நான் எவ்வளவு வல்லவன் என்று. இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது. மாமரத்தில் மாங்காய் காய்க்கும் போது மனித மனத்திலே துடிதுடிப்பிருக்கும் காலமே இளமைக்காலம். இளமையின் சிந்தனைகள் சுகமானவை. அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன. காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர் நீச்சல் போடுகின்றன. கங்கை நதிக்கு குறுக்கே பாய்ந்து, தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்த முயல்கின்றன. ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கின்றன. இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக்காலம் கண்ணுக்குக் காட்டுகிறது. அது மேளச் சத்தத்தோடு சேர்ந்து கொள்கிறது. வீணையின் ஒலியில் நர்த்தனமாடுகிறது. மார்கழிப் பனியில் சட்டையைக் கழற்றிவிட்டு அந்தப் பனியை அனுபவிக்கச் சொல்கிறது. கோடை காலத்து வியர்வையைக் கம்பீரமாகத் துடைத்துவிடச் சொல்கிறது. `இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று இளமையைக் கேட்டால், `எல்லாம் வேண்டும்' என்கிறது. இரதத்திலே கயிற்றைக் கட்டிப் பல்லாலே இழுக்கிறது. முதுமையில் தூக்கவே முடியாத எலும்புகளைப் பல்லால் நறநறவென்று கடித்துத் துப்புகின்றது. கிராமத்து வாழைத் தோட்டங்களுக்குள்ளே ஓடி விளையாடச் சொல்கிறது. எந்தப் பெண்ணைக் கண்டாலும் மனம் ஏதோ செய்கிறது. ஆடல், பாடல், எதிர்வழக்காடல், ஏச்சுக்கு ஏச்சு, பேச்சுக்குப் பேச்சு- ருத்ர மூர்த்தியின் ஆனந்தத் தாண்டவம், இளமையின் ஊழிக்கூத்து. எனக்குப் பன்னிரண்டு வயதான போது கிராமத்தின் பனை மரத் தோப்புகளில் அடிக்கடி அமர்ந்திருப்பேன். மாடு மேய்க்கும் சிறு பெண்கள் பாடிக்கொண்டே போவார்கள். ஆயர்குலச் சிறுவர்கள் சுதி சேராமல் புல்லாங்குழல் வாசிப்பார்கள். பருந்தைப் பார்த்தால் பறக்க நினைப்பேன். வெள்ளாடுகளைப் பார்த்தால் ஓட நினைப்பேன். பூமியைக் குத்தியதும் பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகளைப் போல வாலிபத்தின் சிந்தனையும் வளமானதாகவே இருந்தது. அது ஆடி மகிழ்ந்த காலம். இது எண்ணிப் பார்க்கின்ற காலம். அதே துடிதுடிப்பை மீண்டும் பெறுவதற்கு நான் வைத்தியரை நாடப் போவதில்லை. அந்தச் சுகமான சிந்தனைகளை இப்போது நான் வேறு பக்கம் திருப்பி இருக்கிறேன். வேதாந்தத்தில், தத்துவ விசாரத்தில், -சுகமான சிந்தனைகள் புறப்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்த சில விஷயங்கள், இப்போது ஜீரணிக்கப்படுகின்றன. `சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும்' என்று அருட்பெரும் ஜோதி வள்ளலாரைக் கேட்டேன். அவர் சொன்னார்: `தம்பி! மனம் சலனமுடையது; சபலம் மிக்கது; ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ, அவனது நட்பு உனக்கு வேண்டும். கோயில் கட்டுகிறேன் என்பான்; கோயில் சொத்திலேயே கொள்ளையடிப்பான். அரகர சிவ சிவ என்பான்; அங்கு வரும் பெண் மீதே கண்ணாக இருப்பான். மனம் ஒன்று நாடும்; காதொன்று கேட்கும்; வாயொன்று பேசும்; இவன் பக்தனல்ல; போலி; வேடதாரி. ஒருமையுடன் தியானிக்கும் உத்தமர் தம் உறவு உனக்கு வேண்டும். உள்ளத்தில் வஞ்சம் மறைந்திருக்கும்; முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும். `வாருங்கள் வாருங்கள்' என்று வாயால் அழைப்பான்; சமயம் வாய்த்தால் காலைத்தான் வாருவானே தவிர உன்னை வரவேற்க மாட்டான். `பொய்' என்று தெரிந்து கொண்டே சத்தியம் செய்வான், அவன் கள்ளத்தில் பூத்த மலர்; கபடத்தில் புழுத்த புழு; வெள்ளத்தில் வந்த குப்பை; வேஷத்தில் வாழும் மனிதன். அந்த நடிகனோடு, நீ உறவு கொள்ளாதே! பாடுவதென்றால், மனிதனைப் பற்றிப் பாடாதே; இறைவனைப் பற்றிப் பாடு; பேசுவதென்றால் அவனைப் பற்றியே பேசு. அவன் ஏராளமான வரங்களை உனக்கு அள்ளித் தரா விட்டாலும் உன்னைக் கேலி செய்யமாட்டான். தோளிலே கைபோட்டுப் பையிலே என்ன இருக்கிறது என்று தடவும் நண்பனை விட்டு விலகு. யாரையோ, ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு; இல்லையேல் பொய்யே பேசாதே. ஆசைகளில் எல்லாம் உச்சமான ஆசை எது தெரியுமா? பெண்ணாசை! மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஒருவனின் முன்னால் சோற்றையும் வைத்துப் பெண்ணையும் வைத்தால் அவன் முதலில் பெண்ணையே தொடுவான். மனித மனத்தின் மைய மண்டபத்தில் இருந்தே துயரங்கள் எழுகின்றன. வாளிப்பான உடம்பையும், வளமான கூந்தலையும் பார்த்து மோகித்து விடாதே. இந்திரியம் தீர்ந்துவிட்டால், சுந்தரியும் பேய் போலே! பெண்ணை மறக்க எப்போது `கற்றுக்' கொள்கிறாயோ, அப்போது உன்னை நினைக்கக் கற்றுக் கொள்கிறாய். உன்னை நினைக்கக் கற்றுக் கொண்டு விட்டால், நீ மறக்கவே முடியாதபடி தெய்வம் வந்து உன் மனத்திலே உட்கார்ந்து கொண்டு விடும். எல்லாவற்றுக்கும் `அறிவு' வேண்டும். அவனது `கருணை' என்னும் நிதி வேண்டும். மதத்திலே அன்பு வேண்டும்; வெறி கூடாது. ஒழுக்கம் என்னும் நெறி வேண்டும்; அடுத்தவன் பணத்தில் குறி கூடாது. பலபேர் சொன்ன விஷயங்கள்தான். அவற்றைப் பற்றி ஒழுகாத காரணத்தால் வயதான காலத்தில் புலம்புவோர் எவ்வளவு பேர் தெரியுமா? அதனால்தான் `சென்னை நகரக் கந்த கோட்டத்தில் குடியிருக்கும் சண்முகவேலைப் பற்றி இப்படிப் பாடினேன்' என்று பாடிக்காட்டினார்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும் பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியா திருக்க வேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வுதான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர் தலம் ஓங்கும் கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே! -இந்தத் தத்துவங்களில் எனக்கு எவ்வளவு அனுபவங்கள் தெரியுமா? நான் கடன்பட்டுக் கஷ்டப்பட்ட காலத்தில் என்னைக் காப்பாற்றுவார் என்று ஒரு வழக்குரைஞரை அண்டினேன். அவருடைய சகாக்களோ, என்னுடைய எதிரிகளுக்கெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள். வாங்காத கடனை எல்லாம் நான் கட்டவேண்டியிருந்தது. கையெழுத்தும் இல்லை; நான் வாங்கவும் இல்லை; அப்படி இருந்தும் ஒரு வழக்கு என்மீது டிகிரி ஆயிற்று. அவர் சிரித்துப் பேசுவார்; `கவிஞரே' என்று உயிரை விடுவார். ஆனால், அந்தரங்கத்தில் என் கழுத்தை அறுத்து விட்டார். இறைவனுடைய தர்மச்சக்கரம் நியாயம் கேட்கும் என்பதைத் தவிர, வேறு எதை நான் எதிர்பார்க்க முடியும்? கடவுளின், தண்டனையை நான் நம்புகிறேன். உத்தமமான பக்தனுக்குக் கூடத்தான் சோதனைகள் வருகின்றன; ஆனால், அவை காலம் பார்த்து மீளுகின்றன. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்களோ, ஆனந்தமாக வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அடிவிழ ஆரம்பித்தால் அவர்களைத் தூக்கிப் பிடிக்க ஆள் இருக்காது. அவர்களது பிணத்தின் முன்னால்கூட மற்றவர்கள் குசுகுசுவென்று கேவலமாகப் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, புகழ்ந்து பேச மாட்டார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்ட என்னுடைய தந்தையார் சில நகைகளை ஒருவரிடம் ஈடு வைத்தார். ஐயாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள நகைக்கு ஆயிரமோ, ஆயிரத்து ஐநூறோதான் வாங்கி இருப்பார். மீட்பதற்கு வசதி இல்லாமற் போய்விடும். நகை வட்டியிலே மூழ்கி விட்டதாகச் செட்டியார் அறிவித்து விடுவார். இப்படிப் போன சொத்துக்கள் ஒன்றா, இரண்டா? என் தாயார் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார்கள், `நந்தம் படைத்த பண்டம் நாய் பாதி; பேய் பாதி' என்று. சென்னை அயனாவரம் கிராமமே எங்களைச் சேர்ந்தது. அங்கே வாழுகின்ற மக்கள் அனைவரும் அறிவார்கள். மத்திய அரசாங்கம் கோச் பாக்டரி கட்டியிருக்கும் இடமும் எங்கள் இடமே. இன்று பத்துக்கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்தச் சொத்துக்களில் ஒரு அங்குலம் கூட எங்களுக்கு உதவவில்லை. அதனை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர் வசதியாக அதனை அனுபவித்தார். முன்பெல்லாம் அவர் எப்போது சந்தித்தாலும், `எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்; உங்கள் சொத்து கோடி பெறும்' என்பார். அந்தக் கோடியையும் தான் அனுபவிக்க நினைத்தாரே தவிர, எங்களுக்குத் தர விரும்பவில்லை. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சுமார் முப்பது வழக்குகள் நடைபெறுகின்றன. ஒரு வழக்கு முடிந்து சுமார் இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு இடம் எங்களுக்குத் தீர்ப்பாயிற்று. நானும் எனது சகோதரர் ஏ.எல்.எஸ். அவர்களும் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது, அங்கே `கருணாநிதி நகர்' என்று போர்டு போட்டிருந்தது. சுமார் நூறு குடிசைகள் போடப்பட்டிருந்தன. அந்தக் குடிசைகளை இடித்துத் தள்ளுவதற்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்தப் பகுதியில் வாழும் திரு. வேலூர் நாராயணன் அவர்களோடு குடிசைவாசிகளை அணுகிக் கேட்டோம். யாரும் குடிசைகளைக் காலி செய்வதாக இல்லை. என் சகோதரரும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டார். இன்னும் ஐகோர்ட் உத்தரவு எங்கள் கையில் இருக்கிறது. அந்தச் சொத்துக்கு முதல் பங்காளியான என் சகோதரி, என் வீட்டிலேயே என் அரவணைப்பிலேயே வாழ்ந்து, அதே ஏக்கத்திலேயே மாண்டு போனார். வஞ்சகர்களை நம்பினால் சொத்துக்கள் போகும்; மானம் பறிபோகும். உத்தமர்கள் உறவு, தலைமாட்டிலேயே காவலிருக்கும். 1944-ல் முதன் முதலாக `திருமகள்' என்ற பத்திரிகையில் எனக்கு வேலைக்காகச் சிபாரிசு செய்து ஒரு நண்பர் கடிதம் கொடுத்தார். திருச்சியில் அவர் கடிதம் கொடுத்தார். நான் புதுக்கோட்டைக்குப் போக வேண்டும். கையிலே பணம் இல்லை. `மலையரசி தாயே' என்று வேண்டியபடி பாலக்கரை வழியே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு கடை என் கண்ணில்பட்டது. அது ஒரு வட்டிக் கடை அல்ல, வட்டக் கடை. கொஞ்சம் கமிஷன் எடுத்துக் கொண்டு நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்கும் கடை. அதிலே உட்கார்ந்திருந்தார் ஒருவர். அவர் பெயர் வையிரவன் செட்டியார். எங்கள் ஊரைச் சேர்ந்தவர். நான் அவரிடம் போய் கடிதத்தைக் காட்டிக் கெஞ்சினேன். அவர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார். காலத்தால் அவர் செய்த அந்த உதவி எனக்கு முதல் உத்தியோகத்தை வழங்கிற்று. இறை நம்பிக்கையின் விளைவாகத் துன்பத்துக்கிடையேயும் இன்பமும் தோன்றுவதை நான் பார்க்கிறேன். இப்போது நான் நினைத்தால் செய்ய முடியாத பல காரியங்களை, இதற்கு முன்னாலேயே செய்து முடிக்கும்படி இறைவன் எனக்கு உதவி இருக்கிறான். உதாரணம், எனது ஐந்து புதல்வியரின் திருமணங்கள். எனது ஏராளமான ஆழ்ந்த தத்துவார்த்த எழுத்துக்கள். நான் கவிதையிலே பொய் சொல்லுவேன், கற்பனை என்ற பெயரில். ஆனால், வாழ்க்கையில் பொய் சொல்ல மாட்டேன். எனக்கு மதநெறி உண்டு; வெறி கிடையாது. எங்கே, இப்போது மீண்டும் வள்ளலார் பாடலைப் படித்துப் பாருங்கள். இந்தப் பாடல், துயரப்பட்டபின் எனது சிந்தனையைக் கிளறிற்று. உங்களுக்கு இதுவே ஒரு சுகமான சிந்தனையாக இருக்கும்.

Montag, 13. Februar 2012

This is interesting.... See what you come up with. Don't cheat! Below is Dr. Phil's test. (Dr. Phil scored 55, he did this test on Oprah and she got a 38.) Some folks pay a lot of money to find this stuff out! The following test is pretty accurate and itonly takes a few minutes. Take this test for yourself and send it on to your friends.... The person who sent it placed their score in the email subject box. Please do the same before forwarding it on to your friends (include me please) Don't peek! Answers are for who you are now and not who you were in the past. This is a real test given by Human Relations Departments at many of the major corporations today. It helps them get better insight concerning their employees and in their prospective employees. There are 10 Simple questions, so grab a pencil and paper. Record your letter answers to each question. Change the subject of the email to read YOUR total. When you are finished, forward this to friends, family, and also send it to the person who sent this to you. Make sure to put "YOUR" score in the subject box. Ready? Begin. 1. When do you feel your best... A) in the morning B) during the afternoon and early evening C) late at night 2. You usually walk... A) fairly fast, with long steps B) fairly fast, with little steps C) less fast head up, looking the world in the face D) less fast, head down E) very slowly 3. When talking to people you... A) stand with your arms folded B) have your hands clasped C) have one or both your hands on your hips D) touch or push the person to whom you are talking E) play with your ear, touch your chin, or smooth your hair 4. When relaxing, you sit with.. A) your knees bent with your legs neatly side by side B) your legs crossed C) your legs stretched out or straight D) one leg curled under you 5. When something really amuses you, you react with... A) big appreciated laugh B) a laugh, but not a loud one C) a quiet chuckle D) a sheepish smile 6. When you go to a party or social gathering you... A) make a loud entrance so everyone notices you B) make a quiet entrance, looking around for someone you know C) make the quietest entrance, trying to stay unnoticed 7. You're working very hard, concentrating hard, and you're interrupted... A) welcome the break B) feel extremely irritated C) vary between these two extremes 8. Which of the following colors do you like most.... A) Red or orange B) black C) yellow or light blue D) green E) dark blue or purple F) white G) brown or gray 9. When you are in bed at night, in those last few moments before going to sleep you are..... A) stretched out on your back B) stretched out face down on your stomach C) on your side, slightly curled D) with your head on one arm E) with your head under the covers 10. You often dream that you are... A) falling B) fighting or struggling C) searching for something or somebody D) flying or floating E) you usually have dreamless sleep F) your dreams are always pleasant POINTS: 1. (a) 2 (b) 4 (c) 6 2. (a) 6 (b) 4 (c) 7 (d) 2 (e) 1 3. (a) 4 (b) 2 (c) 5 (d) 7 (e) 6 4.. (a) 4 (b) 6 (c) 2 (d) 1 5. (a) 6 (b) 4 (c) 3 (d) 5 (e) 2 6.. (a) 6 (b) 4 (c) 2 7. (a) 6 (b) 2 (c) 4 8. (a) 6 (b) 7 (c) 5 (d) 4 (e) 3 (f) 2 (g) 1 9. (a) 7 (b) 6 (c) 4 (d) 2 (e ) 1 10 (a) 4 (b) 2 (c) 3 (d) 5 (e) 6 (f) 1 Now add up the total number of points. OVER 60 POINTS: Others see you as someone they should "handle with care." You're seen as vain, self-centered, and extremely dominant. Others may admire you, wishing they could be more like you, but don't always trust you, hesitating to become too deeply involved with you. 51 TO 60 POINTS: Others see you as an exciting, highly volatile, rather impulsive personality, a natural leader, who's quick to make decisions, though not always the right ones. They see you as bold and adventuresome, someone who will try anything once, someone who takes chances and enjoys an adventure. They enjoy being in your company because of the excitement you radiate. 41 TO 50 POINTS: Others see you as fresh, lively, charming, amusing, practical, and always interesting, someone who's constantly in the center of attention, but sufficiently well-balanced not to let it go to their head. They also see you as kind, considerate, and understanding, someone who'll always cheer them up and help them out. 31 TO 40 POINTS: Others see you as sensible, cautious, careful & practical. They see you as clever, gifted, or talented, but modest. Not a person who makes friends too quickly or easily, but someone who's extremely loyal to friends you do make and who expects the same loyalty in return. Those who really get to know you, realize it takes a lot to shake your trust in your friends, but equally that it takes you a long time to get over if that trust is ever broken. 21 TO 30 POINTS: Your friends see you as painstaking and fussy. They see you as very cautious, extremely careful, a slow and steady plodder. It would really surprise them if you ever did something impulsively or on the spur of the moment, expecting you to examine everything carefully from every angle and then, usually decide against it. They think this reaction is caused partly by your careful nature. UNDER 21 POINTS: People think you are shy, nervous, and indecisive, someone who needs looking after, who always wants someone else to make the decisions and who doesn't want to get involved with anyone or anything! They see you as a worrier who always sees problems that don't exist. Some people think you're boring. Only those who know you well, know that you aren't.

மனிதனின் நினைவாற்றல்! by vayal உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிர மாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும். பாடல்களை மனனம் செய்வது மிகச் சிறந்த பயிற்சி. நினைவாற்றல் 20- 25 வயது வரை வளர்ச்சியடைகிறது. 40- 45 வயது வரை அது நிலையாக நíடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75 சதவீதம் நமது 25 வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது

உங்களுக்கு நிதி சுதந்திரம் இருக்கிறதா? by vayal நிதி நிர்வாகம், அது தனி மனித நிதி நிர்வாகமோ அல்லது நிறுவனத்தின் நிர்வாகமோ அவை வளர்ச்சி பெற, `கட்டுப்பாடு' மிக அவசியம். தனி மனித கட்டுப்பாடு, நிர்வாக கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி பெற `ஒழுக்கம்' மிக அவசியம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல் ஆகியவை அவசியம். கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது. மனமுவந்து ஏற்றுக்கொண்டால், இந்த கட்டுப்பாடு ஒரு சுதந்திரம் எனத் தெரிய வரும். எனவே, நிதி சுதந்திரம் பெற (Financial Freedom) இந்த ஒழுக்கமானது அவசியம். நிதி சுதந்திரம் என்றால் என்ன? நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது? இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்? இவற்றை சற்று விரிவாக பார்ப்போம். நம்மில் எத்தனை பேர், நாளைய பற்றிய கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்க முடிகின்றது? இந்த கவலைகளில் பல பணம் சார்ந்ததாகவே இருக்கும். எவர் ஒருவர், தான் இல்லாவிட்டாலும், தன் குடும்பம் பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொண்டுள்ளாரோ, அவருக்கே இந்த `நிதி சுதந்திரம்' உள்ளது எனக் கூறலாம். இந்த `நிதி சுதந்திரம்' அனைவருக்கும் சாத்தியமா! என்றால் சாத்தியமே. அதற்கு, மேலே சொன்ன `கட்டுப்பாடு நிதி ஒழுக்கம்' (Financial Discipline) மிக அவசியம். இந்த நிதி சுதந்திரம் கைகூட `நிதி திட்டமிடுதல்' (Financial Planning) அவசியமாகிறது. நிதித் திட்டமிடுதல் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, அவருடைய நிதி நிர்வாகத்தின் மூலம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இதில், சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவை அடங்கும். நிதித் திட்டமிடுதல் என்பது ஒரு வழிமுறை எனப் பார்த்தோம். இப்போது அதற்கான திட்டங்கள் யாவை என்றும், அவற்றின் பயன்பாடுகளையும் வரிசைப்படுத்துவோம். 1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் (Term Plan) 2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் (Unit Linked Insurance Plan) 3. மருத்துவக் காப்பீடு - (Mediclaim Policy) 4. பரஸ்பர நிதித் திட்டங்கள் (குறிப்பாக SIP/SWO) & (Mutual Fund) 5. மனை மற்றும் வீடு 6. பங்குச்சந்தை முதலீடு - நீண்ட கால அடிப்படையில் முதலீடு. மேற்கூறிய நிதித் திட்டங்களின் பயன்பாடுகளை சுருக்கமாக கீழே காண்போம். 1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் : குறைந்த பிரிமியம் அதிக காப்பீடு. 2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் : நீண்ட கால அடிப்படையில் (20, 25 மற்றும் 30 ஆண்டு காலம்) ஒருவரின் வருமானத்தைப் பாதுகாக்கவும், மேலும் சிறப்பான ஓய்வூதியத்திற்காகவும் பயன்படுத்தலாம். 3. மருத்துவக் காப்பீடு: குடும்பத்திற்கான Floater Policy திட்டங்கள் - முழு குடும்பத்திற்கான Cashless facility. 4. பரஸ்பர நிதித் திட்டங்கள்: மாதம் 100 முதல் 500, 1000 ரூபாய் என நாம் சேமிக்கும் திறனைப் பொறுத்து நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் அடைந்திட சிறந்தவழி. 5. மனை மற்றும் வீடு: வீட்டிற்கானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும். 6. பங்குச்சந்தை முதலீடு : இ கோல்டு (Gold ETF) மற்றும் முன்னணியில் உள்ள நல்ல நிறுவனங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்ற காலங்களில், சிறிது சிறிதாக வாங்கி, நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள் வரை) முதலீடு செய்வது நல்ல எதிர்பார்த்த பலனை அளிக்கும். இப்போது உள்ள காலக்கட்டத்தில், தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய திட்டங்களில் முதலீடு என்பது மிக சுலபமான ஒரு விஷயமாகும். இனி, நிதித் திட்டமிடுதலில் உள்ள சில அடிப்படையான உண்மைகளைப் பார்ப்போம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல், நிதித் திட்டமிடுதல் என்பது முழுமை பெறாத ஒரு விஷயமாகிவிடும். 1. வட்டி விகிதம் (Interest Rate): நாம் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் போது நம் முதலீட்டிற்கு உரிய உண்மையான ஆதாயம் ஆண்டிற்கு 8 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானவரி விலக்கு Sec 80 சி மற்றும் Sec 10 (10 ஞி) படி. 2. மாதம் ரூபாய் 1500 முதல் 2000 வரை 20 வருடங்கள் சேமித்தால், 9 சதவீத கூட்டு வட்டியில் நாம் லட்சாதிபதியாகலாம். 3. உங்களுடைய முதலீட்டின் ஆதாயமானது, பணவீக்கத்தை விட குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுக, சிறுக கரைந்து விடும். கடன் அட்டைகள் (Credit Cards): 1. உங்களுடைய (EMI : Equated Monthly Instalment) மாதத் தவணை உங்களுடைய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரிக்கும் போது, எதிர் காலத்தில் உங்களால் மாதத் தவணையை செலுத்த சிக்கல் வரும். 2. உங்களுடைய கடன் அட்டைகளின் மாதத் தவணை உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை தாண்டும்போது நீங்கள் அபாய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என உணர வேண்டும். ஆயுள் காப்பீடு: யாருடைய குடும்பம் எல்லாம் ஒருவருடைய வருமானத்தை நம்பி இருக்கின்றதோ, அவருக்கெல்லாம் அவசியம் ஆயுள் காப்பீடு தேவை. எப்போது உங்கள் முதலீட்டின் ஆதாயம் எந்த ஒரு இடர்பாடு இன்றி (Risk free Returns) உங்கள் சராசரி செலவுகளை விட, அதிகமாக வருகின்றதோ, அப்போது உங்களுக்கு ஆயுள் காப்பீட்டின் தேவை குறைகின்றது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு ஆயுள் காப்பீடு இருத்தல் அவசியம். உதாரணம்: ஆண்டு வருமானம் 2 லட்சம் எனில் ஆயுள் காப்பீட்டின் தேவை 20 லட்சம் ஆகும். உங்களுடைய ஆண்டு பிரிமிய தவணையானது, உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் போகும் போது, எதிர்காலத்தில் உங்கள் தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல், தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை படி, திட்டங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்தல் ஆகியவை, நாம் மேற்கூறிய `நிதி சுதந்திரம்' அடைவதற்கான உத்திகள் ஆகும். அச்சுதந்திரம் உங்கள் கைகளில்தான் உள்ளது. `நம் முதல் செலவு சேமிப்பே! சேமிப்போம், முதலீடு செய்வோம், வளம் பெறுவோம்.

தகுதியானவர்களுக்கு உதவுங்கள்!-பிப். 18 – காரியார் குருபூஜை! by vayal நாம் படிப்பது, கை நிறைய சம்பாதிக்க மட்டுமல்ல, தனக்குப் போக மிஞ்சியதை, தகுதியானவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் தான்! இதை, தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர், காரியார் எனும் புலவர். திருக்கடையூர் எனும் திருத்தலத்தை அறியாதவர்கள் மிகக்குறைவே. அபிராமி பட்டர் என்பவர், இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள் அபிராமியின் பக்தர், கோவிலில் பணி செய்து வந்தார். ஒரு கட்டத்தில், அம்பாள் மீது கொண்ட பக்தியால் பித்துப் பிடித்தவர் போல் ஆகி விட்டார். அவரது நடவடிக்கையில் சிலர், அதிருப்தி கொண்டனர். ஒரு சமயம், சரபோஜி மகாராஜா கோவிலுக்கு வந்தார். அப்போது, அம்பாளின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டருக்கு, அது பூரண சந்திரன் போல் இருப்பதை உணர்ந்தார். அம்பாளின் அழகில் லயித்துப் போய் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், சரபோஜி மகாராஜா அங்கு தரிசனத்துக்காக வந்தார். ஒவ்வொரு அமாவாசை திதியன்றும், அவர் அம்பாளை தரிசிக்க வருவது வழக்கம். அவர் வந்ததைக் கவனிக்கவில்லை பட்டர். அங்கே இருந்தவர்கள், "நீங்கள் வந்தும், எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருப்பதைக் கவனித்தீர்களா! உங்களுக்கே இந்தக் கதி என்றால், இங்கிருக்கும் மற்றவர்களை இவன் கவனிப்பானா! அம்பாளின் தீவிர பக்தர் போல காட்டிக் கொண்டு, ஒரு பணியும் செய்யாமல் இப்படியே <உட்கார்ந்திருக்கிறான்...' என்றனர். பட்டரிடம், "பட்டரே... என்ன செய்கிறீர்கள்? நான் வந்ததைக் கவனிக்கவில்லையா? இன்று என்ன திதி என்று தெரியும் தானே...' என்றார் மகாராஜா. அம்பாளின் முகத்தை நிலவாகக் கற்பனை செய்து கொண்டிருந்த பட்டர், மன்னர் வந்திருப்பதைப் பார்க்காமலேயே, "இன்று பவுர்ணமி' என்றார். மன்னருக்கு கோபம் வந்து விட்டது. "இன்று இரவு நிலா வராவிட்டால், உமக்கு தண்டனை அளிப்பேன்...' எனச் சொல்லி, சென்றார். அன்றிரவு, தன் காதணியைக் கழற்றி, வானில் எறிந்து, நிலாவாக ஒளிரச் செய்தாள் அம்பாள். இந்தக் கோவிலில் தான் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார். மார்க்கண்டேயனை, மரணத்தில் இருந்து காப்பாற்ற, எமனை எட்டி உதைத்த ஊர் இது. இந்த சிவனின் அரும்பெரும் பக்தரே காரியார். இவர் பெரும் புலவர். பல சிவத்தலங்களுக்கு திருப்பணி செய்து வந்தார். புதிய கோவில்கள் கட்டவும் ஏற்பாடு செய்தார். அமிர்தகடேஸ்வரர் மீது, அருமையான பாடல்களை இயற்றியவர். இன்னும் பல நூல்களை எழுதிய இவர், சிவனைப் புகழ்ந்து, தன் பெயரால், "காரிக்கோவை' என்ற நூலை எழுதினார். அக்காலத்தில், நூல்களை மன்னர்களிடம் வாசித்து காட்டுவது புலவர்களின் வழக்கம். மன்னர்களும் அவற்றுக்காக பரிசுகளை வாரிக் கொடுப்பர். காரியாரும், தன் கோவை நூலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் வாசித்துக் காட்டினார். எல்லா நாட்டு மன்னர்களும், அந்நூலில் பொதிந்திருந்த கருத்துக்களை பாராட்டினர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில், காரியாருக்கு பொன்னையும், பொருளையும் அந்த மன்னர்கள் வழங்கினர். அவர், தனக்காகவோ, குடும்பத்துக்காகவோ அதைச் செலவழிக்கவில்லை. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். மேலும், ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கினார். தகுதியானவர்களுக்கு செய்யப்படும் தானம், அதைப் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பயன்படும். ஒரு ஏழை மாணவனுக்கு தானம் செய்தால், அவன் குடும்பம் மட்டுமின்றி, நாட்டுக்கும், அவன் நன்மை செய்ய ஏதுவாக இருக்கும். அடியார்களுக்கு வழங்கினால், கோவில், குளங்கள் நன்மை பெறும். அதன் மூலம் அன்பும், பக்தியும் தழைக்கும். இவ்வாறு காலம் முழுக்க, தன் புலமைக்கு கிடைத்த பரிசுகளை, மற்றவர் நலனுக்காகவே செலவழித்தவர் காரியார். அந்த திருமகனாருக்கு மாசி பூராடம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவர் வீற்றிருப்பார். இவரது குருபூஜை நன்னாளில், நாமும் தகுதியானவர்களுக்கு தானம் செய்து, அபிராமி மற்றும் அமிர்தகடேஸ்வரரின் அருளைப் பெறுவோம்.

by vayal `தேடுங்கள்; கண்டடைவீர்கள்' என்பது ஏசுநாதர் வாக்கு. `எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?' என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள். அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக நிற்கிறது. பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமனும் வனவாசம் சென்றான்; தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது. கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது. நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது. பணக்காரனாயினும், ஏழையாயினும் வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு சக்கரத்தில் காலைக் கொடுத்து விடுகின்றான்; கொஞ்சக் காலம் அவனை வாட்டி எடுக்கிறது. ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு. கொஞ்சம் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். அதில் ஒருவகை நிம்மதியுண்டு. `மெளனம் கலக நாஸ்தி' என்பார்கள். அளந்து பேசி, அளந்து வாழ்கிறவனுக்கு அதிகபட்ச ஆசை கிடையாது. ஆசை குறையக் குறையத் துன்பமும் குறைந்து போகிறது. வாழ்க்கை கட்டுக்குள் வந்தால், மனமும் கட்டுக்குள் வந்து விடுகிறது; துன்பமும் கட்டுக்குள் நின்று விடுகிறது. எதுவும் அளவு கடந்து போகும்போதுதான் ஒரு எதிரொலியைக் கொண்டுவந்து காட்டுகிறது. இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும்படி பகவான் கீதையிலே போதித்தான். பகலிலே, குருடனுக்கும் கண் தெரியும். ஆனால், இருட்டிலே எவனுக்குக் கண் தெரிகிறதோ அவனே ஞானி. முதுகு சொரணையற்றுப் போய் எவனுக்கு வலி தெரியாமல் போய் விடுகிறதோ, அவனே நிம்மதியடைந்தவன். `உடம்பிலுள்ள எல்லா வாசல்களையும் செம்மையாக அடக்கி, மனத்தை உள்ளேயே நிலை நிறுத்தி, உயிரை அறிவோடு நன்றாக நிலைநாட்டித் தியானத்தைக் கைக்கொண்டு என்னையே நினைத்தவனாய் எவன் தன்னை மறந்து விடுகிறானோ, அவன் பரம்பொருளை அடைகிறான்' என்கிறான் பகவான் கீதையிலே. நீங்கள் பரம்பொருளை அடைகிறீர்களோ இல்லையோ... நிம்மதியை அடைகிறீர்கள். பகவத்கீதையிலே, `க்ஷேத்ரம்' பற்றியும் `க்ஷேத்திரக்ஞன்' பற்றியும் பேசப்படுகிறது. `க்ஷேத்திரம்' என்பது உடல், `க்ஷேத்திரக்ஞன்' என்பது உயிர். எது நிம்மதி இழக்கிறது? க்ஷேத்திரமா? க்ஷேத்திரக்ஞனா? உடலுக்கு நிம்மதி இல்லையென்றால், மருத்துவன் உண்டு. உயிருக்கு நிம்மதி இல்லையென்றால் நீங்களே மருத்துவர்கள். கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த புத்தியும் தலைமுறைக்கு வரமாட்டா. இந்த நூலில் கண்டபடி, நீங்கள் நடந்து கொண்டு விட்டாலும் கூட, உங்களை நீங்களே வாதித்துக் கொண்டிருந்தால் நெஞ்சுக்கு நிம்மதி வராது. ஆன்மாவின் சொரூபத்தை உணர்ந்து. அதன் இயக்கத்திற்கு ஒத்துழைப்பதுதான் தேகம் என்பதை அறிந்து ஒழுங்காக இயங்கினால், நிம்மதி நெஞ்சுக்குள்ளே இருப்பதைக் காணலாம். அது ஒன்றும் கடையில் விற்கும் கத்திரிக்காய் அல்ல... வசதியுள்ளவன் வாங்கிக் கொள்வதற்கு! மீண்டும் சொல்கிறேன், மனசுதான் காரணம். ஒன்றைச் `சரி' என்று நினைத்து விட்டால் மனசு நிம்மதியடைகிறது. `தவறு' என்று நினைத்து விட்டால் மனசு தாவிக் குதிக்கிறது. அதனால்தான், `நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்கிறார்கள். நல்ல மனைவியின் மேல் சந்தேகப்பட்டே, வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும் உண்டு. மோசமான மனைவியையே முழுக்க நம்பி, நிம்மதியாக வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு. பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துப் புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு; இருநூறு ரூபாய்ச் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு. அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு; சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்துக் கொண்டவர்களும் உண்டு. மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது. அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது. மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது. பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற் கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறு கட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன். மாறுதல் மனிதன் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி. `இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது' என்று சில சமயங்களில் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம். காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே பொருள். உலகத்தில் எது தவிர்க்க முடியாதது? பிறந்த வயிற்றையும் உடன் பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்குரியதே. நானே சொல்லி இருக்கிறேன்... `ஜனனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்குரியவை' என்று. மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்; தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம். மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன? மனது நம்முடையது; நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் அமைதியாக இருந்து செத்தவர்களல்ல. இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல. `அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை; அறியாத மானிடர்க்கு அக்கரையில் பச்சை' எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனத்தை எளிமையாக வைத்திருங்கள். கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள். நிரந்தரமான நிம்மதிக்கு ஈஸ்வரனை நாடுங்கள். `நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!'

A 1st grade school teacher had twenty-six students in her class. She presented each child in her classroom the 1st half of a well-known proverb and asked them to come up with the remainder of the proverb. It's hard to believe these were actually done by first graders. Their insight may surprise you. While reading, keep in mind that these are first-graders, 6-year-olds, because the last one is a classic! 1. Don't change horses until they stop running. 2. Strike while the bug is close. 3. It's always darkest before Daylight Saving Time. 4. Never underestimate the power of termites. 5. You can lead a horse to water but how? 6. Don't bite the hand that looks dirty. 7. No news is impossible. 8. A miss is as good as a Mr. 9. You can't teach an old dog new math. 10. If you lie down with dogs, you'll stink in the morning. 11. Love all, trust me. 12. The pen is mightier than the pigs. 13. An idle mind is the best way to relax. 14. Where there's smoke there's pollution. 15. Happy the bride who gets all the presents. 16. A penny saved is not much. 17. Two's company, three's the Musketeers. 18. Don't put off till tomorrow what you put on to go to bed. 19. Laugh and the whole world laughs with you, cry and you have to blow your nose. 20. There are none so blind as Stevie Wonder. 2 1 . Children should be seen and not spanked or grounded. 22. If at first you don't succeed get new batteries. 23. You get out of something only what you see in the picture on the box. 24. When the blind lead the blind get out of the way. 25. A bird in the hand is going to poop on you. And the WINNER and last one! 26. Better late than pregnant. __._,_.___ . Web Bug from http://geo.yahoo.com/serv?s=97359714/grpId=3909563/grpspId=1705838079/msgId=114439/stime=1328634424/nc1=5741391/nc2=5191954/n

வயிற்றிலும் “பவர் கட்டா’ மூலிகை மருத்துவம் by vayal நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, சக்தியாக மாற்றுவதும் பித்தத்தின் பணியாகும். நாம் உண்ணும் உணவை சரியானபடி செரிக்கவைத்து, தேவையற்ற கொழுப்புகள் அங்குமிங்கும் படியாமல் பாதுகாக்கும் உணவுகள் பித்தசமனி என்று அழைக்கப்படுகின்றன. சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகள் பித்தத்தை சமப்படுத்தும் உணவுகளாகும். பித்தம் சரியாக இயங்காவிட்டால் நமது உணவு செரிமானமாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பித்தத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலின் ஆற்றலை தடை செய்கின்றன. நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் ஒருவிதமான எரிச்சல் வயிற்றில் ஏற்பட்டு, உணவு உண்ணும் வேட்கை அதிகமாகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள பல்வேறு வகையான சத்துகள் உடலின் எடையையும் பருமனையும் அதிகப்படுத்துகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவின் அளவை குறைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடற்பருமன் அதிகமாவதுடன், உடற்பருமன் சார்ந்த சர்க்கரை நோய். ரத்தக்கொதிப்பு, மிகு கொழுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பருமனின் காரணமாக மூச்சு வாங்குதல், உடலின் அங்கமைப்புகள் மாறுபடுதல், முழங்கால், கணுக்காலில் வலி உண்டாதல், தொண்டை வறட்சி, கழுத்து, புட்டம் போன்ற சதைப்பகுதிகள் தொங்கி காணுதல், நடக்கும்பொழுது அதிக உடல் எடையின் காரணமாக அசைந்து செல்வது போன்ற தோற்றம், பிறரின் கேலிக்கு ஆளாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. உண்ணும் உணவின் அளவை நமது வேலை மற்றும் எடைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். கூடுதல் கலோரிகள் கொண்ட உணவை தவிர்த்து, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நாம் உண்ணும் உணவுடன் பசியை கட்டுப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் எடை குறையும். உணர்ச்சிவசப்பட்ட பசி என்ற எமோசனல் பசியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நமக்கு பிடித்தமான உணவுகள் என்றால் அதிகமாக சாப்பிடுவதும், பிடிக்காத உணவுகள் என்றால் தவிர்ப்பதும் உடலின் செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, பல்வேறு உடற்கோளாறுகளை உண்டாக்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல நோய்கள் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தவும் அதிக பசியினால் உண்டாகும் நாப்புளிப்பு மற்றும் சுவையின்மை ஆகியவற்றை நீக்கவும் பயன்படுவதுடன், செரிமான ஆற்றலைநிலைநிறுத்தும் அற்புதமூலிகை கள்ளி முளையான். கேரலுமா பிம்பிரியேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த கள்ளி செடிகளின் தண்டுகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. எழுமான்புளி என்ற வேறு பெயர் கொண்ட இந்த மூலிகையின் புளிப்புச் சுவையானது ஊறுகாய்,துவையல் போன்றவை தயார் செய்ய உதவுகிறது. இதன் தண்டுகளிலுள்ள ஸ்டார்வோசைடுகள் மற்றும் பிரக்னின் கிளைக்கோசைடுகள் தேவையற்ற கொழுப்பை நீக்கி, பித்தத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான அளவு மட்டுமே பசியை உண்டாக்கு கிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் தருவதால்பஞ்சகாலத்தில்உட்கொள்ளக்கூடிய உணவாகவும் முற்காலத்தில் இவை பயன் பட்டன. கள்ளிமுளையான் தண்டை மேல்தோல், நார், கணு நீக்கி, நல்லெண்ணெய் விட்டுவதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு, கடுகை சிவப்பாக வறுத்து, இத்துடன் வதக்கிய கள்ளிமுளையான், தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைத்து, துவையல் போல் செய்துகொள்ள வேண்டும். இதனை உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட உடலில் தேங்கிய அதிகப்படியான கொழுப்பு கரையும். உடற்பருமன் நீங்கும். கள்ளிமுளையானை தோல் நீக்கி, நார், கணு நீக்கி, நல்லெண்ணெய்விட்டு வதக்கி மைய அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் நல்லெண்ணெயில் கடுகை போட்டு பொரித்து, அத்துடன் வதக்கிய கள்ளிமுளையான் மற்றும் பொடிகளை கலந்து, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்துக்கொள்ள வேண்டும். இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட தேவையற்ற பசி குறையும். பித்தம் தணியும்.

Mittwoch, 8. Februar 2012

உடற்பயிற்சியில் சில உண்மைகள்… by vayal உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான். நம்பிக்கை: வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை. உண்மை: `ஜிம்' பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம். நம்பிக்கை: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது. உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். நம்பிக்கை: உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும். உண்மை: மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை. நம்பிக்கை: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி. உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடு கிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும். நம்பிக்கை: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை. உண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்பிக்கை: உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும். உண்மை: சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும். நம்பிக்கை: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும். உண்மை: கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும். நம்பிக்கை: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான். உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது vayal | பெப்ரவரி 8, 2012 at 11:09 மு.பகல் | Categories: உடல்நலம் | URL: http://wp.me/pewfk-3Mg Comment See all comments

புண்ணியம் செய்தால்… பிறவி ஜென்மம் நன்றாக அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர்; ஆனால், அவரவர் விருப் பப்படி அது அமைவதில்லை. காரணம், பூர்வ ஜென்ம பாவ - புண்ணியங்கள். புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மாவில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை. சிறு வயதிலேயே சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பர். சிலர், உடல் ஊனத்தோடு பிறக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், பூர்வ ஜென்ம பாவங்கள் தான். தங்கள் பிள்ளைகளை சரியானபடி வளர்த்து, பாவ- புண்ணியங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிள்ளைகளும், பூர்வ ஜென்மத்தின் பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி பிறந்து வளரும். நாம் பூர்வ ஜென்மத் தில் செய்த பாவ, புண்ணியங்கள், நாம் மறு ஜென்மம் எடுக்கும் போது, அவைகளின் பலனை கொடுக்கிறது. இப்படிப் பட்ட பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களை சேர்த்து வைத்து, சஞ்சித கர்மா என்பதை அனுபவிக்க வேண்டும். இந்த சஞ்சித கர்மாவை, ஒரே ஜென்மத்தில் அனுபவித்து ஒழித்து விட முடியாது. இதில், ஒரு பாகம் மட்டுமே இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். இதற்கு, பிரார்த்த கர்மா என்று பெயர். ஒரு அசட்டுப் பிள்ளையைப் பார்த்து, "ஹூம்! எனக்குன்னு இந்த பிராப்தம் வந்திருக்கு பாரு...' என்கின்றனரே... அதுதான் சஞ்சித கர்மாவின் ஒரு பாகம். மீதியுள்ள பாகம், அடுத்து வரும் ஜென்மாக்களில் தொடரும். ஆனால், இந்த ஜென்மாவில் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு, அனுமி கர்மா என்று பெயர். இந்த கர்ம பலன், சஞ்சித கர்மாவுடன் சேர்ந்து விடும். அதனால், சஞ்சித கர்மா எப்போதும் போல் குறையாமலே இருக்கும். நாம் அனுபவிப்பது பிராப்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல கர்மாவின் பலனை, அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். அதேபோல் பாவ கர்மா செய்திருந்தால், அதையும் அடுத்த ஜென்மாவில் அனுபவிக்க வேண்டியிருக்கும். புண்ணியமோ, பாவமோ எதைச் செய்தாலும் பலனை அனுபவிக்கத் தான் வேண்டும். அதனால் தான், "பாவத்தை செய்யாதே...' என்கின்றனர். ஆனால், சுயலாபத்துக்காக பாவங்களை செய்கின்றனர். "வேண்டாம்டா... இது மகா பாவம்; இதைச் செய்யாதே...' என்றால் கேட்பதில்லை. பாவ காரியங்களை செய்வதில் ஒரு சந்தோஷம். இந்த பாவங்களில், பரிகாரமே இல்லாதது பஞ்ச மகா பாவங்கள். அதனால், "வாழ்க்கையில் எந்தவித பாவமும் செய்யாதே...' என்கின்றனர். ஒரு ஜீவனுக்கு ஏதாவது துன்பம் செய்தாலும் அது பாவம்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றுள்ளது. எதையெல்லாம் செய்தால் புண்ணியம்; எதையெல்லாம் செய்தால் பாவம் என்று சாஸ் திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. கூடுமான வரையில் அவைகளை தெரிந்து, வாழ்க்கையை நடத்தினால் நல்லது; பாவத்தை செய்து பரிகாரம் தேட வேண்டாம்; கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும்! Comment See all comments

சுமை தீர்ப்பார் சுப்பிரமணியர் தைப்பூசத் திருவிழா, நம் சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மனிதன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அந்தக் கஷ்டத்தை சிலரிடம் சொல்லி, ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர், எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்... அவர்கள், நம் கஷ்டத்தையே அவர்களுக்கு சாதகமாக்கி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்; கேலி செய்யலாம். ஆனால், கடவுள் அப்படியல்ல... கல்லாயிருந்தாலும்; கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர்விட்டு, கவலையைத் தெரிவித்தால், நம் மனச்சுமை இறங்கி விடும். இதையே தான், முருக பக்தர்கள் காவடி எடுத்து கடன் தீர்க்கின்றனர். காவடியில் என்ன இருக்கிறது? பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், மீன் (மச்சகாவடி), பாம்பு (சர்ப்பக்காவடி), சேவல் ஆகியவற்றை காவடிச் சுமையாகக் கொண்டு செல்கின்றனர். ஒரு தண்டத்தில், இரண்டு புறமும் கலசம் அல்லது பானை கட்டி, அதனுள் அபிஷேகப் பொருட்களை இடுவர். சேவல் காவடியாக இருந்தால், அதை காவடியின் ஒருபுறம் கட்டி வைக்கின்றனர். இப்பொருட்களின் தாத்பர்யம் என்ன? ஒரு உயிர் பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. சற்று வயதான பின், பசுவின் பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன், உயிர் வதைக்கும் போது, பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு, சதையிலும் பால் ஊற்றப்படுகிறது. "முருகா... என் பிறப்பு முதல், இறப்பு வரை சுமை தான். அச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா...' என்றழைப்பதே பால் காவடி தத்துவம். "உலகத் துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் என் மனதின் சூட்டை தணித்து வை...' என, முருகனை வேண்டுவது, பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம். "என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என, எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்...' என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம். "மீன் போல் பிறவிக் கடலில் கிடந்து தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பைப் போல், வாழ்க்கை என்னும் புற்றுக்குள் கிடந்து தவிக்கிறேன். இந்த பிறவியில் இருந்து என்னை மீட்டு, உன்னோடு சேர்த்துக் கொள்...' என்பது மச்ச, சர்ப்பக்காவடி தத்துவம். "விடியலுக்காக காத்திருக்கும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து, எனக்கும் எப்போது விடிவு காலம் வரும்?' என்று கேட்டு சேவல் காவடி எடுக்கிறோம். நம்மை மனக் கவலைகளில் இருந்து மீட்டு, சுமையை, தானே ஏற்றுக்கொள்ளும் கருணை தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். "கந்தன்' என்ற சொல்லுக்கு, "பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்' எனப் பொருள் கூறுகிறது வடமொழி நிகண்டு. பகைவர் என்றால் எங்கோ வெளியில் இருந்து வருபவர் அல்ல; நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது; தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து, நம்மைக் காப்பவன் கந்தன். "கந்து' என்றால் "யானையைக் கட்டிப்போடும் தறி' என்று பொருள். <உயிர்கள் என்னும் யானைகளை, ஆசைகளில் இருந்து மீட்டு, அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர், "கந்தன்' ஆனார். "கந்து' என்ற சொல்லுக்கு, "பற்றுக்கோடு' என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால், அவர்கள் பிறவிச் சுழலில் இருந்து மீள்வர். இந்த உலக வாழ்க்கை, மாயையானது; ஆனாலும், இங்கு கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காக, மனிதன் இதை விட மறுக்கிறான்; இறந்தாலும், மீண்டும் இங்கேயே வந்து பிறக்கிறான். கந்தப்பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு, இந்த துன்பம் இராது. அவர்கள் அந்தக் கந்தனுடனேயே கலந்து விடுவர். தைப்பூசத் திருநாளில் காவடி எடுத்து, முருகன் கோவில்களுக்கு செல்வோம். நம் மனச் சுமையை பெருமானிடம் இறக்கி வைப்போம்; நம் பணிகளைத் தொடர்வோம்; மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.

Montag, 6. Februar 2012

இனி இப்படி கனவில்தான் பார்க்கலாம் அல்லது கடையில்தான் ! வருமா அந்தநாள் !! Subject: . தொலைத்தவை எத்தனையோ! அந்த மரங்களும், நிலமும்…. அந்தக் காலம் ஊரில் சொந்த பந்தங்களுடன் இயற்கையோடு ஒன்றி, இயற்கையாக வளர்ந்த கிராமத்துச் சூழற் காலம்… நான் வளர்ந்த வீட்டின் பின் வளவு, இடது பக்க மூலையில் இருக்கும் பச்சைத் தண்ணீர் மாங்காய் மரம் (மாங்காய் பொல்லாத புளிப்பு இல்லாதபடியால் இப்படிப் பெயர் வைத்தோம்.). நாம் நின்றபடியே மாங்காய் பிடுங்க முடிந்த சிறிய குடை போன்ற மரம். ஓட்டு மாங்காய் போன்ற நீண்டு, குண்டாகி, கிளிமூக்குடைய (வளைந்த) மாங்காய். சிலவேளைகளில் நாம்(தம்பி, தங்கைகள்) மரம் ஏறியும் பிடுங்குவதுண்டு. இதைச் சும்மா சாப்பிடுவதிலும், சிறிது சிறிதாகக் கொத்தி உப்புக் கலந்தும் சாப்பிடுவோம். இம் மரத்தடியிலிருந்து 4, 5 அடி தள்ளி ஒரு ஈச்ச மரம் உண்டு. இது காய்ப்பது சிலவேளை எமக்கு மறந்திடும். அப்பா வந்து கூறுவார்..ஈச்சம் பழம் பழுத்திருக்கிறது என்று. அதிகாலை எழுந்து சென்று கத்தரி நிறமாகப் பழுத்தவைகளைப் பிடுங்கி வருவோம். செம்பழமாக இருப்பவைகளை உப்பு நீருள் போட்டு வைத்து பழுத்த பின்பு சாப்பிடுவோம். வீட்டின் முன்புறம் முற்றம் தாண்டி ஒரு பெரீய்யய..மாமரம். 3,4 பார உந்துகள் (லொறிகள்) நிற்கக் கூடிய அளவு பெரிய குடை நிழல் மரம். மாங்காயும் பென்னம் பெரிய குண்டு மாங்காய் காய்க்கும். மரம் பழுத்துக் குலுங்க, அணில் வந்து கொந்தியதும் பழங்கள் நிலத்தில் விழும். அதைத் துப்புரவாக்கி வெட்டி உண்பது மிகச் சுவையாக இருக்கும். அம்மா கூப்பிட்டதும், கந்தையா அண்ணை வந்து மாங்காய்கள் பிடுங்கித் தருவார். பறி கட்டிய கொக்கைத் தடியுடன் வந்து பிடுங்குவார். ஒரு அறையுள் வைக்கோல் பரவி அதில் மாங்காய்களை அம்மா நிலத்தில் பரவி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் வைக்கோலை நீக்கி…நீக்கிப் பார்த்து, பழுக்கப் பழுக்க வெட்டி, வீட்டில் அனைவருக்கும் பங்கு போட்டு எவ்லோரும் உண்போம். ஒரு பழம் சாப்பிட்டாலே பெரும் உணவு மாதிரி வயிறு நிறைந்து விடும். ருசியும் அப்படியே. நிறையப் பழுத்ததும், அம்மா பிட்டு உணவு செய்து மாம்பழத்துடன் உண்போம். மாமரத்தின் அருகே 3 இலுப்பை மரங்கள் இருந்தது. இலுப்பை மரங்கள் பூ பூக்கும் காலத்தில் பூக்கள் விழுந்து மரத்தின் கீழே முத்து முத்தாக இருக்கும் காட்சி அழகோ! அழகு! அது இன்னும் அழகாக இருக்க தம்பி, தங்கைகளோடு வளவு முழுதும் கூட்டி, செடிகள் வெட்டி, கல்லுகள் பொறுக்கித் துப்புரவாக்கி விடுவோம். பிள்ளைகள் நாங்கள் கத்தி, மண்வெட்டி, குப்பைவாரி என்று தூக்கிச் சென்று துப்பரவாக்க, அப்பா தடுக்க மாட்டார். அவரும் நடு நடுவில் வந்து உதவிகள் செய்வார். குப்பைகளை எப்படிப் பிரித்துப் போடுவது என்று கூறுவார். (பீங்கான் ஓடு வேறாக, முள்ளு, குச்சிகள், நல்ல குப்பைகள் எமது நெல் வயலுக்கு உரமாக). தேவையற்ற குப்பைகளுக்கு நெருப்பு மூட்டி உதவி செய்வார். தீ ஏற்றும் போது எங்களையும் கூட்டிச் சென்றே நெருப்பு வைப்பார். அவருக்குத் தெரியும் அது எமக்கு மகிழ்வான அனுபவம் என்று. நெருப்பு எரிவது பார்க்க மிக ஆசையாக இருக்கும். அப்பா அருகில் இருப்பார். பின்னர், மாலையில் குளித்து அழகாக அமர்ந்து ரசிப்போம். இளம் காற்று வீசும். அப்பா அம்மாவும் எங்களுடன் இருப்பார்கள். இலுப்பை மரங்களின் கீழ் 3 அல்லது 4 கட்டையான வாழை மரம் போல, நீண்ட வெள்ளைக் கொத்துப் பூ பூக்கும் ஒரு வகை பூ மரம் இருந்தது. (படத்தில் உள்ளது போல). ஒரு வகை மணிவாழை சாதி. (கனாஸ் canas என்றும் கூறுவர்.) (செல்லமே தொடர் நாடக முன் பாடல் காட்சியில் அந்த பூவுடன் நீண்ட இலை கொண்ட, வாழை போன்ற கட்டை மரம் வருகிறது.) இது பூ பூக்கும் காலமும், ஆசை ஆசையாக விடிய எழுந்து பார்ப்போம். வீட்டுப் படலையோடு 3 பெரிய புளிய மரம். (இதன் காய் போல பூவும் உண்ண சுவையானது.) அதன் கீழே கூட்டித் துப்புரவாக்கி, அயல் வீட்டு கோபால், தங்கைமாருடன் கிரிக்கெட் அடிப்போம், இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவோம். பக்கத்தில் முருங்கை மரத்தில் இலையும் காயும் பிடுங்கி அம்மாவிற்குச் சமைக்கக் கொடுப்பது. அடுத்த வீட்டு அக்காவுடன் அந்த வேலிப் பொந்தினால் சென்று கதைப்பது. வேலியால் எட்டிக் கதைப்பது. முற்றத்தில் தொடங்கி நடுவளவு வரை வரிசையாக மூன்று பலா மரங்கள். பலா மரத்தின் கீழ் பாய் போட்டு எஸ்.எஸ். சி (10ம் வகுப்பு) பரீட்சைக்குப் படித்தது. நீண்ட கம்பி குச்சியால் பலா இலைகளை எமது ஆட்டிற்காகச் சேகரித்தது. வீட்டின் முற்றத்து பப்பாளி மரம், அதன் பழங்களின் சுவை. இப்படி தொலைத்தவை எத்தனையோ!….எத்தனை நினைவுகள் மறக்க முடியாதவைகள்! Nyah-Nyah Who me?

நோய் வரும்முன் தடுக்க நெறிமுறைகள். by vayal மனிதனுக்கு உண்டாகும் கொடிய நோய் என்பது அவரவரர் தலைவிதியோ அல்லது ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றமோதான் காரணம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சில வாழ்வியல் காரணிகள் தான் இத்தகைய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்கள் என லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவை, புகையிலை போடுவது, புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், உடலின் கூடுதலான எடை, போதிய அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு சூரிய ஒளி படாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, தாய்ப்பால் புகட்டாமல் இருப்பது, ஹார்மோன் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, வேகாத மாமிசம் உண்பது, போதிய நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணாமல் இருப்பது, அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது.. இவைதான் மனிதனை தாக்கும் கொடிய நோய்களின் ஆரம்பக் காரணியாகும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதுதான். இந்த வாழ்வியல் முறைகளால் நாம் கொடிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் இதோ.. · அதிகாலையில் சூரியயோதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். · எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட வேண்டும். · காலை, மாலை தினமும் 20 நிமிடங்களாவது அவசியம் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். அவற்றில் சில.. நடத்தல், 20 முறை குனிந்து நிமிர்தல், 20 முறை நன்றாக உட்கார்ந்து எழுதல், நின்ற இடத்தில் மூன்று நிமிடங்கள் ஓடுவது, 2 நிமிடங்கள் நின்ற இடத்தில் குதித்தல், 50 முறை கயிற்றாட்டம் (ஸ்கிப்பிங்) போடுதல், கை, கால் விரல்களை நீட்டி மடக்குதல், இது தவிர, மூச்சுப் பயிற்சி 5 நிமிடம் கண்களுக்கு பயிற்சி 3 நிமிடம்.. · தகுந்த யோகாசனங்களை முறைப்படி கற்று செய்ய வேண்டும். · நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். · உறங்குவதும், நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும். · பெரும் தீனியை ஒழிக்க வேண்டும். உணவருந்தும்போது பேசக் கூடாது. மௌனமாக நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். மாமிசத்தையும், அதிக உப்பு, காரத்தையும் குறைக்க வேண்டும். · தினசரி ஏதேனும் ஒருவேளை பச்சையாக உட்கொள்ளும் பழங்கள் காய்கள், பழச்சாறுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மற்ற இரு வேளைகளில் வழக்கமான சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். இடைப்பட்ட வேளையில் நொறுக்குத்தீனி தவிர்க்கப்பட வேண்டும். · நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும். · பகல் உணவை விட இரவு உணவு அளவு குறைவாகவும், இரவு 8 மணிக்குள்ளும் முடித்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்து சாப்பிடக் கூடாது. · இரவில் சாப்பிட்டதும் சற்று உலாவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும். · உணவருந்திய உடனே வேலைகள் செய்வதோ, குளிப்பதோ கூடாது. · ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும். · உப்பு, சர்க்கரை, காரம், புளிப்பு, முதலியவைகளை இயன்ற அளவு குறைத்து சாப்பிட வேண்டும். · மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். · தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். · தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி இவைகளுக்கு கடையில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடக் கூடாது. தேவையற்ற ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும். · ஆறு மாதத்திற்கு ஒருமுறை மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தூய காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு வாருங்கள். இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தால், நோய் என்னும் அரக்கனை அண்ட விடாமல் தடுக்கலாம்.

Mittwoch, 1. Februar 2012

வாழ்வை மாற்றும் `நட்பு’! by vayal `ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்' - ஆங்கிலப் பழமொழி. `அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன' என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும். இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே! "பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம். `என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்' என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை. "மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்'' என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் "இடுக்கண் களைவதே நட்பு'' என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார். நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்... என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா? ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா? வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா? நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா? தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா? நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா? நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா? கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்' என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும். உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள். ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்' அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது... "தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்; எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்; அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்; உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்; நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை'' நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! by vayal மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான். "நலமாக இரு...' என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, "நேத்ர தீட்சை' என்பர். கையசைத்து, "நலமாக இரு...' என்று மகான்கள் சொல்வதற்கு, "ஹஸ்த தீட்சை' என்று பெயர். மனதால் நினைத்து, "நலமாக இரு...' என்பதற்கு, "மானச தீட்சை' என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம். ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும். மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும். தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, "நேத்ர தீட்சை' என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது. "என்ன சார்... புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்... ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும். "என்ன மாமி... புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான். சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி... "குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு...' என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்! by vayal மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதிக சந்தோசம் அதிக கவலை பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். எளிமையான எதிர்பார்ப்பு கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சத்தான உணவு அவசியம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம். நட்பான சூழல் அவசியம் வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம். நோய்கள் தரும் மன அழுத்தம் குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.